Monday, 25 September 2017

முப்பெரும் தேவியரின் திருவருள் கிட்ட


த்ரிநேத்ராம் ஹாஸ்யஸம்யுக்தாம் ஸர்வாலங்கார பூஷிதாம்
விஜயாம் த்வாமஹம் வந்தே துர்க்காம் துர்க்கதி நாஸினீம்
நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
ஸர்வபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மநோரமாம் ஆதித்யமண்டலே லீநாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்.

பொதுப்பொருள்: 

முக்கண்களோடு புன்முறுவல் பூத்த திருமுகம் கொண்டவளாய், ஸர்வாலங்கார பூஷிதையாய், எதிலும் வெற்றியருளும் விஜயாவாய், சரணடைந்தவர்களின் துர்வினைகளை நாசம் செய்யும் துர்க்காம்பிகைக்கு நமஸ்காரங்கள். கருடனின் மேல் ஆரோகணித்து வரும் கோல்ஹாபூரில் அருளாட்சி செய்யும் மஹாலக்ஷ்மியை நமஸ்கரிக்கிறேன். சகல பாவங்களையும் அழிக்கும் மஹாலக்ஷ்மியே தங்களுக்கு நமஸ்காரங்கள். தாமரை மீது வீற்றருளி குண்டலினி சக்தியாய் திகழ்பவளே தங்களுக்கு நமஸ்காரம். வெண்ணிறம் கொண்டு மனோகரமான அழகுடன் சூரிய மண்டலத்தின் நடுவில் வீற்றருளும் ஹரிக்கு ப்ரியமான சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கின்றேன்.

No comments:

Post a Comment