
விருப்பங்கள் நிறைவேற தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்
- ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள் :
திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக.
No comments:
Post a Comment