
ஓம் கம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய மோதகஹஸ்தாய
நாலிகேரப்ரியாய ஸர்வாபீஷ்டப்ரதாயிநே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஸர்வஜனம்மே வஸமாநய ஸ்வாஹா.
கணேச கல்பம்
பொதுப் பொருள்:
கம் எனும் பீஜத்திற்கு உரிய மகாகணபதியே! ஒரு தந்தத்தைக் கொண்டவரே! ஹேரம்பன் எனும் பெயர் பெற்றவரே! திருக்கரத்தில் மோதகத்தை ஏந்தியுள்ளவரே! தேங்காயை உண்பதில் பிரியமுள்ளவரே! பக்தர்களின் சகல விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே! ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் எனும் லக்ஷ்மி பீஜம், புவனேஸ்வரி பீஜம், மன்மத பீஜாட்சரங்களை தன் மூல மந்திரத்தில் வைத்துள்ளவரே! அனைவரும் எனக்கு வசமாகும்படிச் செய்வீராக. எனக்கு குறைவற்ற செல்வ வளங்களைத் தந்தருள்வீர்.
(நான்காம் பிறைச் சந்திரனை பார்த்ததால் கிருஷ்ணருக்கு ஜாம்பவானிடமிருந்து சியமந்தகமணியை திருடினார் என்ற அபவாதம் எழுந்தது. அதை நீக்க கிருஷ்ணர் கடைபிடித்த விரதமே சங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து நிலவை தரிசித்த பின் இரவு உணவை முடித்து விநாயகப் பெருமானை ஆராதித்தால் குறைவற்ற செல்வம் பெறலாம். தடைகள் தவிடுபொடியாகும்.)
No comments:
Post a Comment