Monday, 25 September 2017

கடன் தீர்ந்து வளங்கள் பெருக



த்வயா ஹ்ருத்வா வாமம் வபு ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் தவத்ரூபம் ஸகல மருணாபம் த்ரிநயனம்
குசாப்யா மாரம்ரம் குடில சசி சூடால மகுடம்
ஆதிசங்கரரின் ஸௌந்தர்யலஹரி

பொதுப் பொருள்: 

பிரிக்கவொண்ணாத சிவமும் சக்தியுமான அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபியே நமஸ்காரம். சிவன் வெள்ளை நிறத்துடனும், சக்தி சிவப்பு நிறத்துடனும் ஒன்றியிருக்கிறார்கள். ஆனால் இதில், தேவியின் உருவம் முற்றிலும் சிவப்பு நிறமாகவே காணப்படுகிறது. அதோடு, அவள் முக்கண்களைக் கொண்டவளாகவும், தன்னுடைய கிரீடத்தில் சந்திரப் பிரபையை உடையவளாகவும், காட்சி தருவது, சிவமே முழுவதுமாக சக்தியாகிவிட்டதோ என்றே கருத வைக்கிறது. இத்தகைய மகிமை வாய்ந்த சக்தியே நமஸ்காரம்.

(இத்துதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜபித்து வந்தால் வாழ்வில் சகல வளங்களும் பெற்று  கடன் தொல்லைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.)

குற்றங்கள் மன்னிக்கப்பட


மனோவ்ருந்திரஸ்து ஸம்ருதிஸ்தே ஸமஸ்தா
ததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி
சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்
ப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!
ஆதிசங்கரர் அருளிய புவனேஸ்வரி துதி 

பொதுப் பொருள்: 

அம்மா! நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும். 

(இத்துதியை தினமும் இரவில் படுக்கப்போகும் முன் பாராயணம் செய்தால் நாம் அன்றன்று அறியாமல் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படும்.)

ஆபத்துகள் அகல


பானுகோடி பாஸ்வரம் பவாப்பதிதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷமக்ஷசூல மக்ஷரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே.
காலபைரவாஷ்டகம்

பொதுப் பொருள்:  

கோடி சூர்யப் பிரகாசம் பொருந்தியவரும், பிறவிக் கடலைக் கடத்துவிப்பவரும், பரம்பொருளும், கழுத்துப் பகுதியை கருமை நிறமாய் கொண்டவரும், வேண்டுவோர் வேண்டியதை அளிப்பவரும், முக்கண்ணரும், யமனுக்கு யமன் போன்றவரும், தாமரைக் கண்ணரும், சூலபாணியும், அழிவற்றவரும் காசிகாபுரியின் ஆதிநாதருமான காலபைரவரைப் பணிகிறேன். 

(இத்துதியை ஆபத்துக் காலங்களில் பாராயணம் செய்தால் ஆபத்துகள் அகலும்.)

குறைவற்ற செல்வம் பெற


ஓம் கம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய மோதகஹஸ்தாய 
நாலிகேரப்ரியாய ஸர்வாபீஷ்டப்ரதாயிநே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
ஸர்வஜனம்மே வஸமாநய ஸ்வாஹா. 
கணேச கல்பம் 

பொதுப் பொருள்: 

கம் எனும் பீஜத்திற்கு உரிய மகாகணபதியே! ஒரு தந்தத்தைக் கொண்டவரே! ஹேரம்பன் எனும் பெயர் பெற்றவரே! திருக்கரத்தில் மோதகத்தை ஏந்தியுள்ளவரே! தேங்காயை உண்பதில் பிரியமுள்ளவரே! பக்தர்களின் சகல விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே! ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் எனும் லக்ஷ்மி பீஜம், புவனேஸ்வரி பீஜம், மன்மத பீஜாட்சரங்களை தன் மூல மந்திரத்தில் வைத்துள்ளவரே! அனைவரும் எனக்கு வசமாகும்படிச் செய்வீராக. எனக்கு குறைவற்ற செல்வ வளங்களைத் தந்தருள்வீர். 

(நான்காம் பிறைச் சந்திரனை பார்த்ததால் கிருஷ்ணருக்கு ஜாம்பவானிடமிருந்து சியமந்தகமணியை திருடினார் என்ற அபவாதம் எழுந்தது. அதை நீக்க கிருஷ்ணர் கடைபிடித்த விரதமே சங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து நிலவை தரிசித்த பின் இரவு உணவை முடித்து விநாயகப் பெருமானை ஆராதித்தால் குறைவற்ற செல்வம் பெறலாம். தடைகள் தவிடுபொடியாகும்.)

விஷக் காய்ச்சல் விலக


கிரந்தீ மங்கேப்ய: கிரணநிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகரசிலாமூர்த்தி மிவ ய:
ஸ: ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா: ஸுகயதி ஸுதாதார ஸிரயா ஆதி சங்கரரின் ஸெளந்தர்யலஹரி 

பொதுப் பொருள்: அம்பிகையே நமஸ்காரம்.

என் ஐம்புலன்களாலும் பக்தி ரசத்தைப் பெருக்கும் வகையில் உன்னை வணங்குகிறேன். சந்திரகாந்தச் சிலை வடிவினளாக உன்னை உருவகித்து தியானிக்கிறேன். எனக்கு, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை அடக்கும் கருடன் போன்ற ஆற்றலினை அருள்வாயாக. அம்மா, உன் பார்வை, விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகளையும், விஷக் காய்ச்சலையும் அறவே ஒழிக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம் தன்னைத் தாக்கக்கூடாது என்பதற்காக மஹாவிஷ்ணுவே அம்ருதேஸ்வரியான அம்பிகையை தியானித்திருக்கிறார் என்றால், உன் அருள்தான் எத்தகைய நன்மை விளைவிக்கக் கூடியது! 

(இந்தத் துதியை பஞ்சமி திதிநாள் அன்று நோயுற்றோர், விஷ உபாதையால் அவதியுறுவோர் முன் 16 முறை ஜபித்து அவர்களுக்கு விபூதி இட்டு அம்பிகையை உளமாற வணங்கினால் பாதிப்புகள் விலகும்)

திருமகளின் திருவருள் நிலைத்திட


ஸ்திராபவ மஹாலக்ஷ்மி
நிச்சலா பவ நிர்மலே
ப்ரஸன்ன கமலே தேவி
ப்ரஸன்ன ஹ்ருதயா பவ!
லட்சுமி கல்பம்

பொதுப் பொருள்: 

தாயே, திருமகளே, எங்கள் வீட்டில் நீ நிரந்தரமாக வசித்திட வேண்டும். எங்கள் உள்ளம் உவகையால் பூரிக்க, சஞ்சலமற்ற சந்தோஷத்துடன் வசிக்க வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் கமலா தேவியே, எங்களுக்குத் தெளிவான சிந்தனையை அளித்து, எங்களுடன் நிரந்தரமாக எங்கள் இல்லத்தில் வீற்றிருந்து அருள் புரிவாயாக.

உன்னதப் பதவியும் அதிகாரமும் பெற



த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா. ஸௌந்தர்ய லஹரி 

பொதுப் பொருள்: 

சிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் மும்மூர்த்திகளுக்கும்  உரிய பூஜையாகும். ஏனென்றால் அந்த மும்மூர்த்திகளும் உங்களுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றியவர்களே. இவ்வாறு மும்மூர்த்திகளுக்குமான பூஜைக்குரியவளே, நமஸ்காரம். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங்களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.

(ஆதிசங்கரர் அருளிய இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அதிகாரத்தோடு கூடிய உயர்ந்த பதவி கிடைக்கும்.)

வாழ்வு வளம் பெற



வல்லீ வதன ராஜீவ மதுபாய மஹாத்மனே
உல்லஸன்மனி கோடீர பாஸுராயாஸ்து மங்களம்
கந்தர்ப்ப கோடி லாவண்ய நிதயே காமதாயினே
குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்
ஸ்கந்த பூஜா கல்பம்

பொதுப் பொருள்: 

வள்ளியின் முகமாகிற தாமரையில் தேன்வண்டுபோல் இருப்பவரும், ஒளி வீசுகின்ற மணிமயமான கிரீடம் சூடி பிரகாசிக்கின்றவருமான முருகனுக்கு நமஸ்காரம். கோடி மன்மதனுடைய அழகைத் தன்னகத்தே கொண்டவரும், பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை அளிப்பவரும், குலிசாயுதத்தை கையில் தரித்திருப்பவருமான கந்தனே, நமஸ்காரம்.

எல்லா செயல்களிலும் வெற்றி பெற


ஓம் நமோ கணபதயே நமஹ
கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:
த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:
விநாயகஸ்சாருகர்ண: பஸுபாலோ பவாத்மஜ:
பத்ம புராணத்தில் உள்ள விநாயகர் துதி

பொதுப் பொருள்: 

‘ஓம்’ எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே, இடையூறுகளை இல்லாது செய்பவரே, அழகான நீண்டதுதிக்கையை உடையவரே, யானையின் முகம் படைத்தவரே, கங்கா, கௌரி என இரண்டு தாய்களைக் கொண்டவரே, பக்தர்களுக்குக் குறைவில்லாது அருள்புரிபவரே, ஒரு தந்தத்தைக் கொண்டு அருள் புரிபவரே, அழகிய பெரிய காதுகளைக் கொண்டவரே, உலக மக்களைக் காப்பவரே, பரமனின் புத்திரனே, உமக்கு நமஸ்காரம். எங்கள் விக்கினங்களையெல்லாம் விலக்கி நிம்மதிப்பெருவாழ்வு வாழ, வழி நடத்துவீராக.

(விநாயகரைத் தொழ நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. எப்போதும் அவரை நினைத்து வணங்கலாம். நம் செயல்களில் ஏற்படும் இடையூறுகளை அகற்றி வெற்றிபெறச் செய்பவர் அவர். அறுகம்புல்லால் இத்துதியைக்கூறி அவரை அர்ச்சித்தால் எல்லா வளமும், காரிய வெற்றியும் பெறலாம்.)

சந்திராஷ்டம பாதிப்புகள் நீங்க


ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.
சந்திர பகவான் துதி

பொதுப்பொருள்: 

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட  சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும்,  ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.  

(இத்துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட் கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.)

குருவருளால் சகல நலன்களும் கிட்ட



ஸ்ரீகணேசாய நம:
குருப்ரஹஸ்பதிர்ஜீவ, ஸுராசார்யோ விதாம் வர:
வாகீஸோ திஷணோ தீர்கஸ்மஸ்ரு: பீதாம்பரோ யுவா
ஸுதாத்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹபீடாபஹாரக:
தயாகர: ஸௌம்யமூர்த்தி: ஸுராசார்ய: குட்மலத்யுதி:
லோகபூஜ்யோ லோககுருர் நீதிக்ஞோ நீதிகாரக:
தாராபதிஸ்சாங்கீரஸோ வேத வேத்ய: பிதாமஹ: 
பக்த்யா ப்ருஹஸ்பதிம் ஸம்ஸ்ருத்வா நாமான்யேதானிய :
படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்நர:
ஜீவேத்வர்ஷ ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதிய:
பூஜயேத்குருதினே பீதகந்தாக்ஷதாம்பரை: 
புஷ்பதீபோபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா ச பீடாஸாந்திர்பவேத் குரோ:

விரைவில் திருமணம் நிச்சயமாக



தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ணருக்மிணீ ப்ரியவல்லபவிவாஹம் தேஹிமே ஸீக்ரம்வாஸுதேவ நமோஸ்துதே.
ஸ்ரீக்ருஷ்ண பூஜா கல்பம்

பொதுப்பொருள்:

தேவகியின் மைந்தனான கிருஷ்ணா, ருக்மிணிக்குப் பிரியமானவனே, நமஸ்காரம். எனக்கு சீக்கிரம் திருமணம் நிகழ அருள்புரிவாய் வாசுதேவனே! தங்களை வணங்குகிறேன்.

முப்பெரும் தேவியரின் திருவருள் கிட்ட


த்ரிநேத்ராம் ஹாஸ்யஸம்யுக்தாம் ஸர்வாலங்கார பூஷிதாம்
விஜயாம் த்வாமஹம் வந்தே துர்க்காம் துர்க்கதி நாஸினீம்
நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
ஸர்வபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மநோரமாம் ஆதித்யமண்டலே லீநாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்.

பொதுப்பொருள்: 

முக்கண்களோடு புன்முறுவல் பூத்த திருமுகம் கொண்டவளாய், ஸர்வாலங்கார பூஷிதையாய், எதிலும் வெற்றியருளும் விஜயாவாய், சரணடைந்தவர்களின் துர்வினைகளை நாசம் செய்யும் துர்க்காம்பிகைக்கு நமஸ்காரங்கள். கருடனின் மேல் ஆரோகணித்து வரும் கோல்ஹாபூரில் அருளாட்சி செய்யும் மஹாலக்ஷ்மியை நமஸ்கரிக்கிறேன். சகல பாவங்களையும் அழிக்கும் மஹாலக்ஷ்மியே தங்களுக்கு நமஸ்காரங்கள். தாமரை மீது வீற்றருளி குண்டலினி சக்தியாய் திகழ்பவளே தங்களுக்கு நமஸ்காரம். வெண்ணிறம் கொண்டு மனோகரமான அழகுடன் சூரிய மண்டலத்தின் நடுவில் வீற்றருளும் ஹரிக்கு ப்ரியமான சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கின்றேன்.

நினைவாற்றல் பெருக


அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவபுஷா
ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்

பொதுப் பொருள்:

அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.

கருணை தெய்வம் காயத்ரி தேவி


அது பிரம்ம முகூர்த்தம். ஆதவன், தன் பொன்கிரணங்களை புவியில் செலுத்த, புரவியில் அமர்ந்து புறப்பட ஆயத்தமானான்.  அதி காலையின் மெல்லிய குளிர்ச்சியால் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த விஸ்வாமித்திரர் சிலிர்த்துக்கொண்டார். அவரது உள்ளம் பேரானந்தத்தில் திளைத்தது. மெல்ல கண்களைத் திறந்து பால்வெளியைப் பார்த்தார். பார்வை தீட்சண்யமாக ஆகாயத்தை ஊடுருவியது. பல லோகங்களைத் தாண்டிப் பயணித்த அந்த பார்வை மிகப் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்த சில அட்சரங்களை தரிசித்தது. அந்த எழுத்துகளை மனம் உள்வாங்க, உதடுகள் அந்த எழுத்துகளை உச்சரித்தன.

ஓம் பூர்ப்புவஸ்ஸுவஹ
தத்ஸ்வ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

இதற்கு என்ன பொருள்? புத்தி ஆராய்ந்தது. மனதில் சூரியன் சிரித்தான். இதோ வெளியே இருக்கும் என்னை உன் உள்ளேயே கண்டு கொள். அதற்கு  புத்தியை தூண்டவேண்டுமல்லவா? யார் அந்த புத்தியை தூண்டுவது? அதற்காக யாரை வேண்டுவது என அடுக்கடுக்காய் கேள்விகள் எழ அர்த்தம் புரிந்தது.

ஓம். நம் அறிவை விகசிக்கச் செய்கின்ற சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக. அற்புதம். சரி, ‘நம்’ என்றால்...  எல்லோரும். எல்லோரும் என்றால்?  மனித குலம் அனைத்துக்குமான மந்திரமிது. மந்திர ராஜம். மந்திரங்களின் தாய். எங்கிருந்து ஒளிர்கிறது இந்த மந்திரம்?  ரிக் வேதத்திலிருந்து! விஸ்வாமித்திரர் வியந்தார். உலகம் உய்ய வேதமாதா தம்மூலமாக பூமிக்குள் பிரவேசமானது குறித்து மகிழ்ந்தார். உருவத்தை விட உச்சரிப்பில் சக்தி வாய்ந்தவளாய் மந்திரமாதாவாக விளங்கப் போகிறாள் எனக் குளிர்ந்தார். 

‘‘தாயே காயத்ரி... தாயே.. காயத்ரி’’ என அந்த மந்திர வலிமையைப் போற்றித் துதித்தார். மந்திரத்திற்கு உருவம் தந்து, காயத்ரியை தேவியாக்கி ஞான உலகத்திற்கு தந்தார். பிரம்ம ரிஷியாய் உயர்ந்தார்.  -இவை எல்லாம் புராணம் சொல்லும் தகவல்கள். இந்த காயத்ரி மந்திரத்தின் மகிமை சொல்லி மாளாது. காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபிப்பவர்களின் அனைத்து நியாயமான ஆசைகளும் நிறைவேறும். ஆத்ம சுத்தி கிடைக்கும். அவர்கள் இந்த உலகத்தில் சகல வளங்களையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என உறுதி செய்கிறார்கள் ரிஷிகள். 

இத்தனை சிறப்பு வாய்ந்த காயத்ரி தேவிக்கு கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தனிக் கோயில் இருக்கிறது. கஞ்சித் தொட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து 15 நிமிடம் நடந்தால் கோயிலை அடையலாம்.காயத்ரி மந்திரம் மிகச் சிறியதாக இருந்து, மிகப்பெரிய மகத்துவத்தோடு விளங்குவது போலவே அன்னையின் ஆலயமும் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வினைப்பயனால் கடுமையான தோஷங்களால் பீடிக்கப்பட்ட ஒரு மன்னன் தன் தோஷங்கள் நீங்க தல யாத்திரை மேற்கொண்டான். தில்லைக் காளியை தரிசித்து விட்டு, சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசிக்க முகாமிட்டிருந்தான். 

அப்போது அந்த ஊரில் வசித்து வந்த ஒரு வேதியர் மன்னரின் பிரச்னையைக் கேள்வியுற்றார். அவர் தினமும் பல ஆயிரக்கணக்கில் காயத்ரி மந்திரம் ஜபிப்பவர். மன்னரின் மீது கருணை கொண்ட அவர் தமது காயத்ரி மந்திர ஜப பலனை மன்னருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். உடனே மன்னரைப் பீடித்த தோஷம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த மன்னன், அவருக்கு ஏராளமான செல்வங்களை பரிசளிக்க முன்வந்தான். அதை ஏற்க மறுத்த அவர், ‘‘உங்கள் தோஷம் நீக்கி அருளிய காயத்ரி மாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்புங்கள். அதுவே நீங்கள் செலுத்தும் நன்றி’’ என்று கேட்டுக்கொள்ள இந்த ஆலயம் உருவானது என்கிறார்கள்.

சிறிய அழகிய ராஜ கோபுரம் கடந்து உள்ளே செல்ல, கோஷ்டத்தில் சரஸ்வதி, அமிர்தகலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர்  அருள்கிறார்கள். கருவறையில் அன்னை காயத்ரி தேவி மேற்கு நோக்கி அருள்கிறாள். ஐந்து திருமுகங்கள், கருணை பொழியும் கண்களுடன் தாமரை  மலரில் வீற்றிருக்கிறாள். அன்னையின் பாதமருகே ஸ்ரீசக்ரம் உள்ளது. காலையில் காயத்ரியாகவும் மதியம் சாவித்திரியாகவும் மாலையில்  சரஸ்வதியாகவும் அருளும் அன்னை இவள். 

இங்கு, ஆவணி மாதம் பௌர்ணமியன்று காயத்ரி ஹோமம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வோர் சகல வளமும் பெறுகிறார்கள். கருவறையில்  சிரிக்கும் அன்னை, மந்திரமாய் நம் மனதுள் அமர்ந்து ஓங்காரமிட ஆயிரம் சூரியன் மனதில் உதயமாகிறது; நம் துயரெல்லாம் பனியாய் மறைகிறது.

Thursday, 14 September 2017

புதன் பகவான் மந்திரம்

புதன் பகவான் மந்திரம்

புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம்.

புதன் பகவான் நம் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் சிறுவர், பெண்கள், ஆண்கள் யார் வேண்டுமானாலும் இதை அனுசரிக்கலாம். புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயர் உண்டு .புதனை வழிபட்டால் அகங்காரம் அழியும்.
அமைதி கிடைக்கும் .

புதன் மந்திரம் :

ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்

புதன் காயத்ரி மந்திரம் :

ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்

இந்த பாடலை பாடி புதன் அருளை பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன். புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம்.

பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

பணப்பிரச்சனை, குடும்ப கஷ்டம், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரத்தை சொல்லி பலன் பெறலாம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 

தியான ஸ்லோகம் :

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் 
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் 
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் 
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் 

மூலமந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி 
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச 
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா 

ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக்  குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள். 

சிவாஷ்டோத்தர சத நாமாவளி

சிவாஷ்டோத்தர சத நாமாவளி

சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும்.

சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் "நமஹ" என்றும் தமிழில் "போற்றி" என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து இந்த சிவநாமாவளி பாடப்படும்.

01. ஓம் சிவாய நமஹ
02. ஓம் மஹேச்வராய நமஹ
03. ஓம் சம்பவே நமஹ
04. ஓம் பினாகிநே நமஹ
05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ
07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
08. ஓம் கபர்தினே நமஹ
09. ஓம் நீலலோஹிதாய நமஹ
10. ஓம் சங்கராய நமஹ

11. ஓம் சூலபாணயே நமஹ
12. ஓம் கட்வாங்கிநே நமஹ
13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
18. ஓம் பவாய நமஹ
19. ஓம் சர்வாய நமஹ
20. ஓம் திரிலோகேசாய நமஹ

21. ஓம் சிதிகண்டாய நமஹ
22. ஓம் சிவாப்ரியாய நமஹ
23. ஓம் உக்ராய நமஹ
24. ஓம் கபாலிநே நமஹ
25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
27. ஓம் கங்காதராய நமஹ
28. ஓம் லலாடாக்ஷõய நமஹ
29. ஓம் காலகாளாய நமஹ
30. ஓம் க்ருபாநிதயே நமஹ

31. ஓம் பீமாய நமஹ
32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
33. ஓம் ம்ருகபாணயே நமஹ
34. ஓம் ஜடாதராய நமஹ
35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

36. ஓம் கவசிநே நமஹ
37. ஓம் கடோராய நமஹ
38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
43. ஓம் ஸ்வரமயாய நமஹ
44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
45. ஓம் அநீச்வராய நமஹ

46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
47. ஓம் பரமாத்மநே நமஹ
48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
49. ஓம் ஹவிஷே நமஹ
50. ஓம் யக்ஞ மயாய நமஹ

51. ஓம் ஸோமாய நமஹ
52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
53. ஓம் ஸதாசிவாய நமஹ
54. ஓம் விச்வேச்வராய நமஹ
55. ஓம் வீரபத்ராய நமஹ

56. ஓம் கணநாதாய நமஹ
57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
59. ஓம் துர்தர்ஷாய நமஹ
60. ஓம் கிரீசாய நமஹ

61. ஓம் கிரிசாய நமஹ
62. ஓம் அநகாய நமஹ
63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
64. ஓம் பர்க்காய நமஹ
65. ஓம் கிரிதன்வநே நமஹ

66. ஓம் கிரிப்ரியாய நமஹ
67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
68. ஓம் புராராதயே நமஹ
69. ஓம் மகவதே நமஹ
70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
74. ஓம் ஜகத் குரவே நமஹ
75. ஓம் வ்யோமகேசாய நமஹ

76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
78. ஓம் ருத்ராய நமஹ
79. ஓம் பூதபூதயே நமஹ
80. ஓம் ஸ்தாணவே நமஹ

81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
82. ஓம் திகம்பராய நமஹ
83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
84. ஓம் அநேகாத்மநே நமஹ
85. ஓம் ஸாத்விகாய நமஹ

86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
87. ஓம் சாச்வதாய நமஹ
88. ஓம் கண்டபரசவே நமஹ
89. ஓம் அஜாய நமஹ
90. ஓம் பாசவிமோசகாய நமஹ

91. ஓம் ம்ருடாய நமஹ
92. ஓம் பசுபதயே நமஹ
93. ஓம் தேவாய நமஹ
94. ஓம் மஹாதேவாய நமஹ
95. ஓம் அவ்யயாயே நமஹ

96. ஓம் ஹரயே நமஹ
97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
98. ஓம் அவ்யக்ராய நமஹ
99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

101. ஓம் ஹராய நமஹ
102. ஓம் அவ்யக்தாய நமஹ
103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

106. ஓம் அனந்தாய நமஹ
107. ஓம் தாரகாய நமஹ
108. ஓம் பரமேச்வராய நமஹ

காவேரி அம்மன் 108 அர்ச்சனை போற்றி

காவேரி அம்மன் 108 அர்ச்சனை போற்றி

1. ஓம் லோபா முத்ரையே போற்றி
2. ஓம் அகஸ்திய பத்தினியே போற்றி
3. ஓம் கவேர ராஜரிஷி மகளே போற்றி
4. ஓம் பிரம்மா மானஸ புத்திரியே போற்றி
5. ஓம் சுத்தமாயா சக்தியே போற்றி
6. ஓம் ஹாதிவித்யா தலைவியே போற்றி
7. ஓம் பொன்னியே போற்றி
8. ஓம் புண்ய தீர்த்தமே போற்றி
9. ஓம் தேவஜோதியே போற்றி
10. ஓம் ஸஹ்யாசலவாசிநியே போற்றி

11. ஓம் பாவங்களைப் போக்குபவளே போற்றி
12. ஓம் விரும்பியவற்றை அருள்பவளே போற்றி
13. ஓம் வீடுபேறு அளிப்பவளே போற்றி
14. ஓம் அகஸ்திய கமண்டல வாசினியே போற்றி
15. ஓம் கும்பமுனி பத்தினியே போற்றி
16. ஓம் சௌந்தரியே போற்றி
17. ஓம் விஷ்ணுமாயையே போற்றி
18. ஓம் பிதிருதேவதாபிரியையே போற்றி
19. ஓம் பிரம்மா சாபமோசனியே போற்றி
20. ஓம் விஷ்ணு சாபமோசனியே போற்றி

21. ஓம் வீரஹத்திதோஷநாசினியே போற்றி
22. ஓம் குடமுனி பத்தினியே போற்றி
23. ஓம் சித்தயோகினியே போற்றி
24. ஓம் பிரம்மச்சாரிணியே போற்றி
25. ஓம் விதர்ப்ப நாட்டு மகளே போற்றி
26. ஓம் நதி ரூபிணியே போற்றி
27. ஓம் பாவ விமோசனியே போற்றி
28. ஓம் சாப விமோசனியே போற்றி
29. ஓம் சர்யா நாதார் சிஷ்யையே போற்றி
30. ஓம் ஸ்ரீவித்யா மந்தர வடிவே போற்றி

31. ஓம் பொதியமலை வாசியே போற்றி
32. ஓம் யோக சித்தியே போற்றி
33. ஓம் மந்த்ர சித்தியே போற்றி
34. ஓம் இத்மவாஹன் அன்னையே போற்றி
35. ஓம் ஜல ரூபிணியே போற்றி
36. ஓம் கன்னியே போற்றி
37. ஓம் பிரம்மகிரி வாசினியே போற்றி
38. ஓம் முக்கூடல் தீர வாசினியே போற்றி
39. ஓம் சம்பா பதி வாசினியே போற்றி
40. ஓம் கவிரிபூம்பட்டின வாசினியே போற்றி

41. ஓம் சாயபுர சக்தி பீட வாசினியே போற்றி
42. ஓம் பூரணியேபோற்றி
43. ஓம் ஈங்கோய்மலை வாசினியே போற்றி
44. ஓம் அகண்ட காவேரியே போற்றி
45. ஓம் மத்திய அகண்டகாவேரியே போற்றி
46. ஓம் 66 கோடிதீர்த்த பாவமோசனியே போற்றி
47. ஓம் புண்யதீர்த்தமே போற்றி
48. ஓம் மஹாதேவியே போற்றி
49. ஓம் தட்சணதேச வாசினியே போற்றி
50. ஓம் பசுமையை காப்பவளே போற்றி

51. ஓம் லோகபாவனியே போற்றி
52. ஓம் ஸமுத்ரகாமிநியே போற்றி
53. ஓம் கவேரபுத்ரியே போற்றி
54. ஓம் வேதங்களால் புகழப்படுபவளே போற்றி
55. ஓம் கருணைக் கடலே போற்றி
56. ஓம் நான்முகன் மகளே போற்றி
57. ஓம் பதிவ்ரதாதேவியே போற்றி
58. ஓம் திவ்யமானவளே போற்றி
59. ஓம் மங்கள ரூபிணியே போற்றி
60. ஓம் பவித்திரமானவளே போற்றி

61. ஓம் புக்தி, முத்தி, சாந்தியை கொடுப்பவளே போற்றி
62. ஓம் இனியவளே போற்றி
63. ஓம் பாபநாசினியே போற்றி
64. ஓம் ஹயக்ரீவரால் வணங்கப்பட்டவளே போற்றி
65. ஓம் 51 உபநதிகளை உடையவளே போற்றி
66. ஓம் ஜகன்மாதாவே போற்றி
67. ஓம் முனிவர்களால் பூஜிகப்படுபவளே போற்றி
68. ஓம் பரிசுத்தமானவளே போற்றி
69. ஓம் நதிகளின் நாயகியே போற்றி
70. ஓம் தேவர்களால் வழிபடுபவளே போற்றி

71. ஓம் உத்தமமானவளே போற்றி
72. ஓம் தயா நிதியே போற்றி
73. ஓம் மாசற்றவளே போற்றி
74. ஓம் தட்சணகங்கையே போற்றி
75. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
76. ஓம் காவேரரிஷியின் குலதனமே போற்றி
77. ஓம் ஞானவடிவே போற்றி
78. ஓம் செந்நெல் தருவோய் போற்றி
79. ஓம் அரங்கனைச் சூழ்ந்தவளே போற்றி
80. ஓம் தண்தமிழ் பாவையே போற்றி

81. ஓம் நெல்லிமரதீர்த்ததாரையே போற்றி
82. ஓம் வனதேவதையேபோற்றி
83. ஓம் விரும்பியவரம் அளிப்பவளே போற்றி
84-. ஓம் நாவலந்தீவில் வசிப்பவளே போற்றி
85. ஓம் ஆசாபாச கற்பரசியே போற்றி
86. ஓம் உத்தம கற்பரசியே போற்றி
87. ஓம் கர்நாடகவாசியே போற்றி
88. ஓம் திராவிடவாசியே போற்றி
89. ஓம் கடலில் கரைபவளே போற்றி
90. ஓம் சுமங்கலியே போற்றி

91. ஓம் தூர்வாசர் மாணவியே போற்றி
92. ஓம் 64 இலக்கண முடையவளே போற்றி
93. ஓம் தஞ்சை பெரிய கோவில் உடையாய் போற்றி
94. ஓம் திருச்சி மலைக்கோட்டையுடையாய் போற்றி
95. ஓம் மாயூரவசினியே போற்றி
96. ஓம் லலிதை பக்தையே போற்றி
97. ஓம் பாரதவாசிநியே போற்றி
98. ஓம் சிவாலயம் உடையோய் போற்றி
99. ஓம் விஷ்ணு ஆலயம் உடையோய் போற்றி
100. ஓம் சக்தி ஆலயம் உடையோய் போற்றி
101. ஓம் சோழமண்டல வாசினியே போற்றி
102. ஓம் சேரநாடு செழிப்படையச் செய்பவளே போற்றி
103. ஓம் கொங்குநாடு உய்யச் செய்பவளே போற்றி
104. ஓம் விவசாயிகளின் தேவியே போற்றி
105. ஓம் நால்வரால் புகழப்பெற்றவளே போற்றி
106. ஓம் சங்க இலக்கியம் வளர்த்தவளே போற்றி
107. ஓம் காவிரி தேவியே போற்றி
108. ஓம் போற்றி போற்றி ஸ்ரீராஜராஜச்வரியின் வடிவானளே போற்றி போற்றி

நன்மை தரும் சந்திர காயத்ரி மந்திரம்

நன்மை தரும் சந்திர காயத்ரி மந்திரம்

சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது சந்திர பகவானால் ஏற்படும் தீங்கு விலகி நன்மை உண்டாகும். (குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) சந்திர பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். சந்திர ஷேத்திரம் திங்களுர், திருப்பதி கோவில், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி, சென்று வழிபட்டு வரவும். இது சிறந்த பரிகாரம் ஆகும்.

சந்திர காயத்ரி மந்திரம்


சந்திர காயத்ரி -அழகு, தாய், மூளை வளர்ச்சி, உணர்சிகள், கற்பனை திறனுக்கு சந்திரனே அதிபதி
சந்திர காயத்ரி 
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

அம்ருதேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்ன: சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்ன: சோமஹ் ப்ரசோதயாத்

Wednesday, 6 September 2017

விநாயகர் ஸ்லோகம்

Image result for ஸ்ரீ விநாயகர்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தாஅல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்
தப்பாமற் சார்வார் தமக்குகணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

கந்த குரு கவசம்

Image result for muruga

        விநாயகர் வாழ்த்து

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5)

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

        செய்யுள்

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10)

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15)

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20)

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25)

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... (30)

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... (60)

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... (65)

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... (70)

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... (80)

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... (90)

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... (95)

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... (100)

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... (105)

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... (110)

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... (115)

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... (120)

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... (125)

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... (130)

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... (135)

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... (140)

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... (145)

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... (150)

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... (155)

கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... (160)

ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... (165)

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... (170)

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... (175)

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... (180)

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... (185)

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... (190)

முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... (195)

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... (200)

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... (205)

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... (210)

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... (215)

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... (220)

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... (225)

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... (230)

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... (235)

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... (240)

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... (245)

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... (250)

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... (255)

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... (260)

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... (265)

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... (270)

அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... (275)

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... (280)

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... (285)

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... (290)

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... (295)

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... (300)

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் பிரதிஷ்டித்தான் ...... (305)

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... (310)

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... (315)

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமுல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... (320)

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... (325)

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... (330)

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... (335)

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... (340)

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... (345)

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... (350)

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... (355)

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... (360)

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... (365)

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... (370)

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்
முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... (375)

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... (380)

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... (385)

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்து நிறுத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமம் குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... (390)

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... (395)

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை ஒரு மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... (400)

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்தரவுகள் நீங்கிவிடும் ...... (405)

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... (410)

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... (415)

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... (420)

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... (425)

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை தினம் ஓதி நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று ...... (430)

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்தியும் கிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றற்று வாழ்வீரே ...... (435)

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... (440)

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... (445)

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... (447)

மகிஷாஸுரமர்தினி ஸ்லோகம்

Related image
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே
கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

சிவபுராணம்

Image result for siva

திருசிற்றம்பலம்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

கந்தர் சஷ்டி கவசம்

Image result for murugan

        குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

        காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

        நூல்

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.